செவ்வாய், அக்டோபர் 28, 2008

அருள்மிகு அழகுநாச்சியம்மன்


அருள்மிகு அழகுநாச்சியம்மன்

பருத்திப்பள்ளி அழகு நாச்சியம்மன் திருவடியை

சீலமுடன் கைதொழுது சேவித்தோர் - ஞாலமதில்

எல்லா நலன்களும் எய்தியே இன்பமுடன்

பல்லாண்டு வாழ்வார் பனைத்து


உலகங்களுக்கு எல்லாம் தாயாக விளங்கும் பராசக்தியானவள் அருள்மிகு அழகுநாச்சியம்மன் என்னும் திருநாமத்துடன் பருத்திப்பள்ளி செல்லன் குல கொங்கு நாட்டு வேளாளர் குடும்பங்களின் குலதெய்வமாக எழுந்தருளி அருள்புரிந்து வருகிறாள்.


மாதம் தோறும் அமாவாசையன்று அழகுநாச்சியம்மன் கோயிலுக்கு வரும் அன்பர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. தமிழ் வருட பிறப்பு, ஆங்கிலவருடபிறப்பு, ஆடி 18 ஆகிய நாட்களிலும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.


மாசி மாதம் அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழா மிகவும் சிறப்புடன் நடைபெறும். மாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதல், பூச்சாட்டியபின் நாள்தோறும் காலை மாலை அம்மனுக்குச் சிறப்புப் பூசை நடைபெறும்.


ஒன்பதாம் நாள் விநாயகர், அழகுநாச்சியம்மன், புவனேசுவரர் ஆகியோர் பருத்திப்பள்ளி நான்கு வீதிகளிலும் உலா வருவர். பின்னர் 10 ஆம் நாள் குதிரை துலுக்குதல் நடைபெறும். அம்மன் அழைப்புக்குப்பின் ஊஞ்சல் பாட்டுப் பாடும் நிகழ்ச்சி நடைபெறும்.


11 ஆம் நாள் வியாழக்கிழமை பொங்கல் வைப்பர். பின்னர் அபிசேக ஆராதனைகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். 12 ஆம் நாள் மஞ்சள் நீராட்டு நடைபெறும். அத்துடன் விழா முடிவு பெறும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக